Tamil News
Pongal Gift: பொங்கல் பரிசு வாங்காத சுமார் 4.40 லட்சம் பேர்...வெளியான தகவல்
- பொங்கலுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 1000 பரிசு தொகையை சுமார் 4,39, 669 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ. 44 ஆயிரம் கோடி பணம் திரும்பி வந்துள்ளது.
New Voter Id: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - சத்யபிரத சாகு
- பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அட்டைகள் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
- தொடர் பனிப்பொழிவால் ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகரின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
- இந்த ஆண்டு, கெலோ இந்தியா யூத் கேம்ஸ் 27 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். விளையாட்டு நிகழ்வில் முதல் முறையாக நீர் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியா பாலைவன பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த் கதிரியக்க கேப்ஸ்யூல் காணாமல் போயுள்ளது. மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கதிரியக்க கேப்ஸ்யூல் குறித்து நாடு முழுவதும் தகவல் பரவிய நிலையில், நாடு தழுவிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொடிய அபத்தை விளைவிக்கும் இந்த சாதனத்தை தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போயிருக்கும் கதிரியக்க சாதனம் 8 மில்லி மீட்டர் நீளமும், அதில் சிறிய அளவிலான கதிரியக்க ஐசோடோப் சீசியம்-137 நிறைந்துள்ளது. இந்த பொருளின் வெளிப்பாடு கதிர்வீச்சு தீக்காயங்கள் அல்லது நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. 1, 400 கிலோ மீட்டர் தூரமான சாலையில் வைத்து இந்த கதிரியக்க கேப்ஸ்யூல் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகத்துக்கு இடமான பொருள்களை கண்டால் பொதுமக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த கேப்ஸ்யூலை மிஸ் செய்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா சுரங்க நிறுவனம், ரியோ டின்டோ குரூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மிகவும் சிறிதான ஆபத்தான விளைவிக்கும் இந்த கேப்ஸ்யூல் லாரியில் கொண்டு சென்றபோது மிஸ்ஸாகியுள்ளது. கடந்த 12ஆம் தேதி சுரங்கம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேப்ஸ்யூல் பெர்த் நகரிலுள்ள கதிரியக்க மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற ஆய்வின்போது இந்த கேப்ஸ்யூல் காணாமல் போனது கண்டறியப்பட்டது.