Re Polling: ‘அடித்து நொறுக்கப்பட்ட சாம்ராஜ் நகர் வாக்குச்சாவடி! மறுதேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடயில் ஏப்ரல் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்திகநாதா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது. (HT_PRINT)
அடித்து நொறுக்கப்பட்ட சாம்ராஜ்நகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹனூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஏப்ரல் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், சாம்ராஜ்நகர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளர் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், அனைத்து பொருள் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, நேற்று (ஏபரல் 26) ஹனூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள வாக்குச் சாவடி எண் 146 இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என்று அறிவித்து உள்ளது.