தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk Cadres Eat Mann Soru On Eps Birthday

EPS Birthday: இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும்; மண்சோறு சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்!

Karthikeyan S HT Tamil

May 12, 2023, 12:10 PM IST

EPS Birthday:எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட அதிமுக தொண்டர்கள் மண்சோறு உண்டு வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.
EPS Birthday:எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட அதிமுக தொண்டர்கள் மண்சோறு உண்டு வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.

EPS Birthday:எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரது பிறந்தநாளில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட அதிமுக தொண்டர்கள் மண்சோறு உண்டு வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. சவரனுக்கு 160 உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

Weather Update : தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெயில் கொளுத்த போகுது.. அடுத்த 5 தினங்களில் வெப்பநிலை உயரும்!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைகளை வழங்கியும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல், சேலத்திலும் அவரது பிறந்தநாளை அதிமுக தொண்டா்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் நகர அதிமுக சார்பில் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி பெண்களுக்கு தென்னங்கன்று, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு காலை முதலே கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் என பலரும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வேண்டி சென்னை மேற்கு மாம்பலத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அக்கட்சியினர் மண்சோறு சாப்பிட்டனர்.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீண்டும் மண் சோறு, தீச்சட்டி என அதிமுகவினர் கிளம்பிவிட்டார்களா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதியி கூறுகையில், 'அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் தான் ஆளுமைமிக்க தலைவராக உருவாகியுள்ளார். அவர் பூரண நலத்துடன் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக இந்த பிரார்த்தனையை செய்துள்ளோம்." என்றார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்