Tirumala brahmotsavam: மூன்றாம் நாள் நிகழ்வு: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
Sep 29, 2022, 01:06 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான இன்று சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான கோயில் பிரம்மோத்சவ நிகழ்வு கடந்த 27ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாலமாக தொடங்கியது. ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் மூன்றாவது நாளான இன்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் உலா வந்தார்.
சமீபத்திய புகைப்படம்
திருமலை திருப்பதியில் பிரமோத்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்த புறப்பட்ட உற்சவரான மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அவருக்கு, திருவாபரண சமர்ப்பணம், தூப, தீப, நெய் வேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டது.
இதைத்தொடரந்து கோயில் வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களை முழக்கமிட்டனர்.
மாடவீதிகளில் இருபுறமும் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்பித்து சுவாமியை வணங்கினர். இந்த ஊர்வலத்தின்போது கலந்து கொண்ட ஜீயர்கள் மற்றும் ஜீயர்களின் சீடர்கள் திவ்ய பிரபந்த கானம் வேத பண்டிதர்களின் வேத கோஷம் ஆகியவை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் செவிகளுக்கு இனிமை ஊட்டுவதாக அமைந்திருந்தன.
டாபிக்ஸ்