தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Student Who Moved From Chennai To Salem For Her Instagram Boyfriend

பெற்றோரே உஷார்! இன்ஸ்டா காதலனுக்காக 13 வயது சிறுமி செஞ்ச காரியத்த பாருங்க!

Mar 12, 2023, 06:37 PM IST

இன்ஸ்டாவில் பழகிய காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் பேருந்து ஏறி சேலம் சென்றார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இன்ஸ்டாவில் பழகிய காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் பேருந்து ஏறி சேலம் சென்றார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இன்ஸ்டாவில் பழகிய காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் பேருந்து ஏறி சேலம் சென்றார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இன்ஸ்டாவில் பழகிய தனது காதலனுக்காக 13 வயது சிறுமி தனியாக சென்னையில் இருந்த சேலத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

Weather Update: ’உஷாரா இருங்க! அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும்’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்த ஒருவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது சிறுமியான அவர் மார்ச் 10 தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்று கூறி மதியத்திற்கு மேல் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் பள்ளியில் இருந்து கிளம்பிய சிறுமி வீடு திரும்ப வில்லை. மாலை வெகு நேரத்திற்கு பின்னரும் மகள் வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள் சிறுமி மதியமே பள்ளியில் இருந்து கிளம்பியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியை காணவில்லை என செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் நேற்று சேலம் பகுதியில் சிறுமி பள்ளி சீருடையில் இருந்ததை கண்ட குழந்தைகள் நல அமைப்பினர் விசாரித்தனர். இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொண்ட குழந்தை நல அமைப்பினர் காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாக தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செம்பியம் காவல்துறையினர் சேலத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். இதையடுத்து சிறுமிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமி இன்ஸ்ட்ராகிராமை தொடர்ச்சியாக பயன்படுத்தியது தெரிய வந்தது.மேலும் இன்ஸ்டாவில் பழகிய காதலனை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் பேருந்து ஏறி சேலம் சென்றார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிக்கு அறிவுரை கூறிய காவல்துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்