GT vs RCB Innings Break: குஜராத் மண்ணில் ஓங்கி அடித்த தமிழர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான்! ஆர்சிபிக்கு சவால்
தமிழர்களான சாய் சுதர்சன் - ஷாருக்கான் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வந்த ஷாருக்கான் புரொமோட் செய்யப்பட்ட நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட நிலையில் அதை பயன்படுத்திக் கொண்ட அவர் ஐபிஎல்லில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஐபிஎல் 2024 தொடரின் 45வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் குஜராத் டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 9 போட்டிகளில் 2 வெற்றியை பெற்று கடைசி் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபியில், லாக்கி பெர்குசனுக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆர்சிபி பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84, ஷாருக்கான் 58 ரன்கள் அடித்தனர்.