தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Kerala Plans Passenger Ship Service To Gulf To Beat Exorbitant Air Charges

வளைகுடா மலையாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி! மலிவு விலையில் கப்பல் சேவையை தொடங்கும் பினராயி விஜயன்!

Kathiravan V HT Tamil

Jun 01, 2023, 04:56 PM IST

”துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்”
”துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்”

”துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்”

அதிகப்படியான விமான கட்டணத்தை முறியடிக்க வளைகுடாவிற்கு பயணிகள் கப்பல் சேவையை கேரளா திட்டமிட்டுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Body Of Fisherman: பாகிஸ்தானில் இறந்த இந்திய மீனவரின் உடல்.. ஒரு மாதத்துக்குப் பின் தாயகம் கொண்டுவரப்படுவதாக தகவல்!

Yamuna Expressway Accident : யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மலையாளிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்யும் வகையில் வளைகுடா நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்க பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், கேரளா மற்றும் வளைகுடா இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான திட்டத்தை வகுக்க முடிவு செய்ததாக மாநில துறைமுக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரித்துள்ளார்.

கேரள துறைமுக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில்

பண்டிகைக் காலங்களில் பயணம் செய்வதற்கு விமான நிறுவனங்கள் அதிகப்படியான பணத்தை வசூலிப்பதாக தெரிவித்த அமைச்சர் அகமது தேவர்கோவில், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மலபார் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் கேரள கடல்சார் வாரியம் ஏற்பாடு செய்திருந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டதாக தெரிவித்த அவர், கேரள இனத்தின் புலம்பெயர்ந்தோரின் அதிகாரபூர்வ அமைப்பான நோர்கா (NORKA)-வின் ஒத்துழைப்புடன் கப்பல் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பதிவில் அமைச்சர் கூறியிருப்பதாவது: வெளிநாட்டவர்களின் பயணப் பிரச்சனைகளைத் தீர்க்க எல்.டி.எஃப் அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையையும் பயன்படுத்தி கப்பல் சேவையை தொடங்க யோசனை உள்ளது என்றார்

டாபிக்ஸ்