தமிழ் செய்திகள்  /  Astrology  /  Karpaga Viruksham Vahanasevai Held At Tirumala Tirupathi Brahmotsavam Fourth Day

Tirumala brahmotsavam: நான்காம் நாளில் மழைக்கு இடையே கற்பக விருட்சக வாகன சேவை

Sep 30, 2022, 11:54 PM IST

திருமலா திருப்பதி பிரம்மோத்சவம் விழாவின் நான்காவது நாளான இன்று மலையப்பர் சுவாமி கற்பக விருட்சக வாகனத்தில் உலா வந்தார் அருள்பாலித்தார்.
திருமலா திருப்பதி பிரம்மோத்சவம் விழாவின் நான்காவது நாளான இன்று மலையப்பர் சுவாமி கற்பக விருட்சக வாகனத்தில் உலா வந்தார் அருள்பாலித்தார்.

திருமலா திருப்பதி பிரம்மோத்சவம் விழாவின் நான்காவது நாளான இன்று மலையப்பர் சுவாமி கற்பக விருட்சக வாகனத்தில் உலா வந்தார் அருள்பாலித்தார்.

ஒன்பது நாள்கள் நடைபெறும் திருப்பதி ஏழுமையான் பிரம்மோத்சவம் விழாவின் நான்காவது நாள் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நான்காம் நாளான இன்று மலையப்ப சுவாமிகள் கற்பக விருட்சக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சமீபத்திய புகைப்படம்

Jackpot: ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பண மழையில் சிக்கிக் கொண்டது யார்..!

Apr 28, 2024 01:42 PM

மீனத்தில் நேராக பாய்கிறார் புதன்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. அது எந்தெந்த ராசிகள்.. பார்க்கலாம் வாங்க

Apr 28, 2024 01:31 PM

Palli Vilum Palankal: நம் உடலின் பாகங்களில் எங்கெங்கு பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

Apr 28, 2024 12:58 PM

மேஷத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. பணமழை கொட்டப் போகும் ராசிகள்.. பெட்டி பெட்டியாக வரப்போகிறது.. ராஜாவாகப் போவது யார்?

Apr 28, 2024 12:00 PM

குபேரனின் ஆசி பெற்ற ராசிகள்.. செல்வந்தராக பிறக்கக்கூடிய ராசிகள்.. கட்டாயம் பணம் வந்து சேரும்.. நீங்க என்ன ராசி?

Apr 28, 2024 10:32 AM

2025 வரை பண மழை.. சனிப்பெயர்ச்சியில் உண்டான யோகம்.. யோகக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்.. உங்க ராசி என்ன?

Apr 28, 2024 10:19 AM

சாகாத தன்மையை அளிக்கும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள்.

அதற்கு தேவர்கள் மட்டும் போதாது என்பதால் கிடைக்கும் அமிர்தத்தில் அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள்.

இதையடுத்து வாசுகி பாம்பின் ஒரு புறத்தை தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார்.

தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைனை தானே உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விஷம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விஷம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது.

அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அப்போது பாற்கடலில் இருந்து அமிர்தம், அட்சய பாத்திரம், இந்திரன் இருக்கும் வெள்ளை யானை ஐராவதம், கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ திரவியங்கள் தோன்றின.

இதில் கற்பக விருட்சம் என்பது யார் எதை வேண்டினாலும் அவர்களுக்கு அதை கொடுக்கும் தன்மை உடையதாக கருதப்பட்டது. அத்தகைய தன்மை உள்ள கற்பக விருட்சத்தை வாகனமாக கொண்டு வேண்டியோருக்கு வேண்டியதை வழங்கும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயில் மாட வீதியில் எழுந்தருளினார்.

திருப்பதியில் இன்று லேசாக மழை பொய்தபோதிலும், அந்த கொட்டும் மழையில் பக்தர்களின் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள், திவ்ய பிரபந்த காலம், நான்மறை வேத கோஷம் ஆகியவற்றிற்கு இடையே கற்பகவிருஷ வாகன சேவை கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து தரிசித்தனர்.