சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர்! பேரவையில் முதல்வர் விளக்கம்!
குற்றம்சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர்மன்றத்தின் 30ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே அவர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் - முதல்வர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்திநகரில் இயங்கி வரும் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்றில் யுகேஜி பயிலும் 6 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின்னர் வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் அப்பள்ளி தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர்மன்றத்தின் 30ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே அவர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசை பொறுத்தவரை செய்தி கேள்விப்படவில்லை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என்று சொல்ல தயாராக இல்லை.
செய்தி அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி உடனடியாக கைது செய்து உடனடியாக சொல்ல வேண்டும் என்று தகவல் சொன்னென்.
இந்த அரசை பொறுத்தவரை குற்றச்செயலில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மனிதக்குலத்திற்கே ஒரு அவமான சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம்.