தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

MHC: கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

Feb 10, 2023, 03:10 PM IST

கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தணைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவிட்டத்தை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

TN 12th Result:இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்? - விபரம் இதோ..!

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனு.மதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், "சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் பேரணி நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால் மேல்முறையீட்டு மனு விசாரணக்கு உகந்ததுதான். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளிக்காத அதே காலகட்டத்தில் பிற அமைப்புகளுக்கு 500 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. எனவே அனுமதி மறுத்த காவல்துறை அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தரப்பில், " நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அணிவகுப்பு நடத்தப்படாது என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்குதான் அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறையில் நடைபெற இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கல் ஊர்வலத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பிறகும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைக்கு பின்னரும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டது.

அனைத்து மத நம்பிக்கையையும் பாதுகாத்து தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் பரீசிலனை செய்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்" என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில், " சுற்றுச்சுவருடன் கூடிய பகுதிகளில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதிகளின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துரிமை, பேச்சு உரிமை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும். கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்

அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மீண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து காவல்துறை முடிவு எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

டாபிக்ஸ்