தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இருவருக்கும் பிரச்னை இல்லை! ஆனாலும் பிரிகிறோம் - பிக் பாஸ் புகழ் வைஷ்ணவி ஷாக்

இருவருக்கும் பிரச்னை இல்லை! ஆனாலும் பிரிகிறோம் - பிக் பாஸ் புகழ் வைஷ்ணவி ஷாக்

Aug 16, 2022, 02:16 PM IST

மூன்று வருட காதல், பின் மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது விவகாரத்து பெறுவதாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான ஆர்ஜே வைஷ்ணவி.
மூன்று வருட காதல், பின் மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது விவகாரத்து பெறுவதாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான ஆர்ஜே வைஷ்ணவி.

மூன்று வருட காதல், பின் மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது விவகாரத்து பெறுவதாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான ஆர்ஜே வைஷ்ணவி.

பிக்பாஸ் வீட்டை வெளியேறிய பிறகு மீடியா வெளிச்சம் தன் மீது படாமலேயே இருந்து வந்தார் வைஷ்ணவி. எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி காதலர் அஞ்சானை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஆனால் தற்போது திடீரென கணவர் அஞ்சனை பிரிந்து விவகாரத்து பெறுவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மூன்று வருட காதல், மூன்று வருட திருமண தம்பதிகளாக வாழ்ந்த பிறகு தற்போது நண்பர்களாக பிரிகிறோம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைஷ்ணவி தனது சமூக வலைத்தள பதிவில், " ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக இருந்து வந்த அஞ்சானும், நானும் பிரிவது என முடிவு செய்துள்ளோம். அவர் மீது எனக்கு காதல் இப்போதும் உள்ளது. ஆனாலும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு, உறவில் எந்த விதமான அழுத்தமும் ஏற்படாமல் நாங்கள் இருவரும் பிரிவது என முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்குள்ளும் நிறைய ஒற்றுமைகள் இருந்தபோதிலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதில் என்ன சிறப்பு உள்ளது என்பதை கண்டறிய இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன.

எங்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்திருக்கும் என ஊகித்துக்கொள்ளும் அனைவருக்கும் எந்த தவறும் நிகழவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். எங்களுக்காக யாரும் வருந்த வேண்டாம். ஏனென்றால் நாங்கள் இருவரும் பிரிந்ததற்காக வருந்தவில்லை. அஞ்சானும், நானும் தற்போது நண்பர்களாகவே உள்ளோம். ஜோடியாக இனி நாங்கள் இருக்க முடியாது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏனென்றால் அது எங்களுக்கு சிறந்தது என நம்புகிறோம். மற்ற எல்லாவற்றையும் விட நண்பர்களாக இருப்பதே சிறந்தது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் தனது கலரான வித்தியாச ஹேர்ஸ்டைல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஆர்ஜே வைஷ்ணவி. பிக்பாஸ் வீட்டில் 63 நாள்கள் இருந்து மற்றவர்களுக்கு கடுமையான போட்டியாளராகவே இருந்தார்.

42வது நாளில் பிக்பாஸ் சீக்ரெட் ரூமுக்கு சென்று அங்கு 3 நாள்கள் இருந்த வைஷ்ணவி, பின்னர் 45வது நாளில் மீண்டும் வந்து அதன் பின்னர் 18 நாள்கள் வரை போட்டியில் தொடர்ந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சண்டை சச்சரவு என்று மட்டும் இல்லாமல், டாஸ்குகளை சிறப்பாக செய்தும், தனது பாணியில் எண்டர்டெயின் செய்தும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.