தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இரண்டு நாட்களாக சடலடத்துடன் வாழ்ந்த மனைவி - என்ன நடந்தது?

இரண்டு நாட்களாக சடலடத்துடன் வாழ்ந்த மனைவி - என்ன நடந்தது?

Divya Sekar HT Tamil
May 24, 2022 10:57 AM IST

சென்னையில் பூட்டப்பட்ட வீட்டில் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவருடன், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி இரண்டு நாள்களாக சடலத்தோடு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலடத்துடன் வாழ்ந்த மனைவி
சடலடத்துடன் வாழ்ந்த மனைவி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், மகள் ஆர்த்தி கடந்த இரு நாள்களாக தனது தந்தை அசோக் பாபுவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் செல்ஃபோனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி நேற்று (மே 23) போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் போலீசாருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பூட்டை உடைத்து உள்ள சென்று பார்த்தபோது, அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அருகில் அசோக் பாபுவின் மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த வேப்பேரி காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக கணவனின் உடலுடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த மரணம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்