Kamal Haasan: ’கேவலமாக உள்ளது’ எண்ணூர் கடற்கரைக்கு சென்ற கமல் பரபரப்பு பேட்டி!
”எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல்”

எண்ணூர் கடற்கரையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
எண்ணூரில் உள்ள கடற்கரையில் எண்ணெய் கலந்த இடங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் படகில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு நான் வருவது முதல் தடவை அல்ல; பலமுறை இங்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இது சுத்தமாகும் என நம்பிக்கொண்டுதான் செல்கிறேன். 7 ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகத்தான் ஆகி உள்ளது. எண்ணெய் பிளாஸ்டிக் விரித்தது போல் நதிக்கு மேல் உள்ளது. 17ஆம் தேதிக்குள் இதனை அகற்ற நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்று 17 ஆனால் இன்று இது நடக்கும் பாடு இல்லை. இன்னும் 17 நாட்கள் ஆகலாம்.
இங்கு வேலை செய்யக்கூடிய நபர்கள் யாரும் நிபுணர்கள் கிடையாது. எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல்.