தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாவமன்னிப்பு பரிதாபங்கள்!ஆபாச சாட்டில் ஈடுபட்ட பாதிரியார் மீது புகார்

பாவமன்னிப்பு பரிதாபங்கள்!ஆபாச சாட்டில் ஈடுபட்ட பாதிரியார் மீது புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2023 01:49 PM IST

Complaint Against Church Father:கன்னியாகுமரி அருகே பாதிரியார் ஒருவர் பல பெண்களிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக சாட்டில் ஈடுபட்டதோடு, அந்த பெண்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த பாதிரியார் மீது காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆபாச சாட்டில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது புகார்
ஆபாச சாட்டில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது புகார்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக பெனிடிக் ஆண்டோ, கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், பல்வேறு பெண்களிடம் பாதிரியார் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்டுள்ள ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மினி அஜிதா கூறியதாவது: "பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வரும் பெனிடிக் ஆண்டோ அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார். இதை எனது மகன் ஆஸ்டின் ஜினோ தட்டிகேட்டதால் எழுந்த பிரச்னையில் அவர் மீது பொய் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ஆஸ்டினை கைது செய்துள்ளனர்.

நிரபராதியான எனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும். பல பெண்களை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்ட பெனிடிக் ஆண்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.

இதற்கிடையே பாதிரியார் ஆண்டோ பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாட்ஸ்அப் சாட்டுகள், புகைப்படங்கள் போன்றவை பாவமன்னிப்பு பிரதாபங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்