தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: ஆக்ரோஷமான கோலத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சீதா.. நடந்தது என்ன?

Seetha Raman: ஆக்ரோஷமான கோலத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சீதா.. நடந்தது என்ன?

Aarthi V HT Tamil
Apr 12, 2023 10:35 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை கடுமையாக திட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் அவள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவெடுத்து பூஜை அறைக்கு சென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு நெற்றியில் பட்டை குங்குமம் என கிட்டத்தட்ட ஒரு காளி போன்ற கெட்டப்பில் வெளியே வர அவளை பார்த்த செக்யூரிட்டி பயந்து கதவை திறந்து விட சீதா வெளியே செல்லும்போது ஒரு கோவிலை பார்த்து அந்த கோவிலுக்குள் செல்கிறாள்.

ஏற்கனவே இந்த கோவிலில் சீதாவின் அப்பா அம்மா ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மாலினி மற்றும் மது என இருவரும் இருக்கின்றனர். இந்த சூழலில் சீதா கோவிலுக்கு வர ஒருவர் பார்த்துக் கொள்வார்களா என்ற பரபரப்புடன் காட்சிகள் நகர்கிறது.

மறுபக்கம் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் ராம் பக்கத்தில் சீதா இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீடு முழுக்க தேடி பிறகு வேலைக்காரியிடம் விசாரிக்கிறான். அடுத்ததாக செக்யூரிட்டியிடம் விசாரிக்க அவன் சீதா ஆக்ரோஷமான கோலத்தில் வீட்டை விட்டு வெளியே போன விஷயத்தை சொல்ல ராம் மகாலட்சுமியிடம் இதை சொல்கிறாள்.

ஆனால் மகாலட்சுமி அவள் வீட்டுக்குத்தான் போய் இருப்பா, நீ ஃப்ரீயா விடு நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி ராமை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள். அடுத்து மகாலட்சுமி செக்யூரிட்டியை கூப்பிட்டு என்ன நடந்தது என கேட்டு அவனை திட்டுகிறாள்.

இந்த பக்கம் சீதா கோவிலில் நான் என்ன தப்பு செஞ்சேன்? உனக்கு என்ன குறை வைத்தேன்? என வேண்டிக் கொண்டிருக்கும் போது அங்கு சாமி வேடத்தில் தசரா பண்டிகை போல தெருக்கூத்து நடக்க அதை பார்த்து சீதாவுக்குள் ஒருவிதமான மாற்றம் நிகழ்கிறது.

அவளும் சாமி வந்தவள் போல் கோவிலுக்குள் நடனமாடி பிறகு மனதுக்குள் புது தைரியத்துடன் வீட்டுக்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்