Ethirneechal: குணசேகரன் 40% ஷேருக்கு ஆப்பு வைக்கும் அப்பத்தா.. எங்கு சென்றார் தெரியுமா?
எதிர்நீச்சல் தொடரின் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் வந்ததற்கு அந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவின் நடிப்பும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
குணசேகரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட ஜனனி வீட்டில் உள்ளவர்களிடம் அவரைப்பற்றி சொல்கிறாள். இதனையடுத்து அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். இதனிடையே அப்பாத்தாவின் 40 சதவீத பிரச்சினை பூதாகாரமாக வெடித்து இருக்கிறது.
இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அப்பத்தா காணவில்லை என அனைவரும் தேடி வர அவர் நேரடியாக நீதிபதியை பார்த்து பேசுவதற்கு சென்றுவிட்டார். அவருடன் ஜனணியும் கைகோர்த்து நடந்த எல்லா விஷயத்தையும் நீதிபதி முன் சொல்கிறார்.
அந்த நேரத்தில் ஜீவானந்தமும் என்டரி கொடுக்கிறார். அவரை பற்றி நல்லபடியாக எடுத்து சொன்னார் அப்பத்தா. ஜனனி, ஜீவானந்தம், அப்பத்தா மூன்று பேரும் துணிந்து களத்தில் இறங்கி விட்டார்கள்.
, அங்கே குணசேகரன், ஆடிட்டர், மற்றும் ஞானம் வருகிறார்கள். அப்பத்தாவை இந்த இடத்தில் எதிர்பார்க்காத குணசேகரன், நீ என்ன பழி வாங்குறியா, நான் அழுஞ்சாலும் அழிவேன் ஆனால் அதற்கு முன் உங்கள் அனைவரையும் அழிச்சிட்டு தான் அழிவேன் என ஆவேசமாக பேசுகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்