தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - பெண் பலி, 17 பேர் படுகாயம்!

ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - பெண் பலி, 17 பேர் படுகாயம்!

Divya Sekar HT Tamil

Jul 03, 2022, 10:08 AM IST

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ ட்ராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் பொறியாளர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ ட்ராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் பொறியாளர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ ட்ராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் பொறியாளர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேர், உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு கல்லட்டி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக சென்றுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

15ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது, அவர்களின் டெம்போ ட்ராவலர் வேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 14 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 18 பேர் பயணித்த நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.

டாபிக்ஸ்