தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Up: Massive Fire Breaks Out In Firozabad; 6 People Charred To Death

firozabad fire accident: உ.பி.யில் தீ விபத்து!ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

Nov 30, 2022, 07:58 AM IST

உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே ஜஸ்ரானா என்ற பகுதியில் அமைந்திருக்கும் பதம் நகரில் ராமன் குமார் என்பவர் வசித்து வந்தார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நகைக் கடை உரிமையாளரான இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

இதையடுத்து இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து ஆக்ரா, எட்டா, மெயின்புரி மற்றும் பிரோசாபாத் ஆகிய இடங்களில் உள்ள 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 12 ஸ்டேஷன்களின் காவல்துறை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்