தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 News: பிரதமர் மோடி கேரளா வருகை..திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு - மேலும் முக்கிய செய்திகள்

Top 10 News: பிரதமர் மோடி கேரளா வருகை..திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு - மேலும் முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil

Apr 24, 2023, 07:06 AM IST

Top 10 News: பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு வருகை உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Top 10 News: பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு வருகை உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Top 10 News: பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு வருகை உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

தேசம்

  • பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் ரோடுஷோவில் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். பின்னர் பா.ஜ.க. இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
  • கா்நாடகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அங்கு இதுவரை ரூ.250 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மது, தங்கம், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாடு

  • 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
  • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் திருச்சியில் இன்று மாநாடு நடைபெறுகிறது. அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
  • தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக (ஏப். 24) இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • சென்னை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது டெம்போ ட்ராவலர் மோதியதில் டெம்போ டிரைவர் மெய்யிறை (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் அமர்ந்திருந்த பாலச்சந்திரன் (26), ரமணா (28) கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக டேங்கர் லாரி ட்ரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.-கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம்

  • சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை மீட்க விமானப் படையின் சி-130ஜே ரக விமானங்கள் 2 மற்றும் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

  • ஐபிஎல் டி-20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
  • ஐபிஎல் டி-20 தொடரில் கொல்கத்தா அணியை வீழத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

டாபிக்ஸ்