தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tip: காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Health Tip: காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

I Jayachandran HT Tamil

Mar 29, 2023, 11:40 PM IST

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு வறுத்து சாப்பிடுவதற்கும் ஏற்ற காய்கறி காலிபிளவர் ஆகும். வட இந்தியாவில் கோபி மஞ்சூரியன் பிரபலமான உணவாகும். கோபி என்றால் காலிபிளவர் என்று தமிழில் அர்த்தமாகும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Oil Pulling Benefits: ’வெண்மை பற்களும்! அழகிய சிரிப்பும் வேண்டுமா! ஆயில் புல்லிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?’

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

அப்படிப்பட்ட சுவையான காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.

காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது.

புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும்.

காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும்.

காலி பிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும்.

இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது. எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு இருந்தால் அவைகள் சரியாகும்.

காலிபிளவரால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உன்னதமான இதய ஊட்டச் சத்தாக விளங்குகிறது.

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

டாபிக்ஸ்