தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Serial Today Update

Karthigai Deepam: தீபாவை கொல்ல வந்து கார்த்தியிடம் சிக்கிய கதிர்

Aarthi V HT Tamil

Mar 28, 2023, 02:56 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Malavika Mohanan: ‘தொப்புளை துளைத்திருக்கிறீர்களா?’ ரசிகர் கேட்ட கேள்வி.. கூலாக பதிலளித்த மாளவிகா மோகனன்!

Kamal: ‘ஷாரூக் விமானம் வாங்க ஆசைப்படுகிறார்.. எனக்கு கொடைக்கானல் பங்களா எதற்கு?’ மகள் ஸ்ருதியிடம் மனம் திறந்த கமல்!

Dheena Re Release:'தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது' - அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் - ரீ ரிலிஸ் ஆகும் தீனா!

Shaitaan OTT: 4 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹாரர் த்ரில்லர்.. ஓடிடிக்கு வரும் சைத்தான்!

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தி தீபாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் அங்கு நர்ஸ் வேடத்தில் ஒருவன் தீபாவுக்கு விஷ ஊசி போட முயற்சி செய்ய கார்த்தி அதை தடுத்து அவன் முகத்திரையை கிழிக்க பிறகு அது நட்சத்திராவின் காதலன் கதிர் என தெரிய வருகிறது. இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த நட்சத்திரா பயத்தில் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறாள்.

பிறகு கார்த்திக் அவனை போலீஸில் பிடித்து கொடுத்து விடலாம் என ஒரு ரூமில் அடைத்து வைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வர வைக்க அதற்குள் நட்சத்திரா மாறு வேடத்தில் வந்து அவனை தப்பிக்க வைக்கிறாள். போலீஸ் வந்து பார்க்கும் போது அந்த ரூமில் கதிர் இல்லாமல் இருக்க அதிர்ச்சி அடைகிறார்கள்.

அடுத்து தீபா கண் விழித்ததும் கார்த்தி ஏன் இப்படி பண்ணீங்க என கேட்க என்னால் உங்களுக்கு நிறைய பிரச்சனை அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல கார்த்தி உங்க அப்பா அம்மா என்னை நம்பி தான் உங்களை என் கூட இருக்க சொல்லி இருக்காங்க என பதில் சொல்கிறான். அடுத்து ஜானகி போன் செய்ய தீபா கோவிலுக்கு போயிருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

மறுபக்கம் அபிராமி வீட்டில் இருக்கும் போது நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அப்பா போலி நகைகளுடன் வீட்டுக்கு வந்து நட்சத்திராவுக்கு நகை எடுக்கணும், நீங்க எடுத்த டிசைனாக இருக்க கூடாது என்பதற்காக அந்த நகைகளை பார்க்க வந்தோம் என சொல்கின்றனர்.

முதலில் நகை எல்லாம் வேண்டாம் என அபிராமி சொல்ல அவர்கள் அபிராமியின் மனதை மாற்றுகின்றனர். அடுத்து நகைகளை பார்த்து கொண்டிருக்கும் போது அபிராமியை திசை திருப்பி போலி நகைகளை மாற்றி வைக்கின்றனர். இந்த நேரத்தில் மீனாட்சி அங்கு வருகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.