‘ரூம் போட்டதே காரணம்’ வணங்கான் பிரச்னைக்கு புதிய காரணம் சொல்லும் பயில்வான்!
Dec 06, 2022, 11:59 AM IST
Bayilvan Ranganathan About Vangaan : பாலா என்ன நினைத்தார் என தெரியவில்லை. தன்னுடைய அறைக்கு அருகில் கீர்த்தி ஷெட்டிக்கு அறை புக் செய்த பாலா, சூர்யாவுக்கு 15 கி.மீ., தொலைவில் அறை ஒதுக்கினார்.
வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினாலும் விலகினார்; பின்னணி நடந்தது என்ன, என்று பலரும் புலன்விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் எப்போதும் சர்சைக்கு பெயர் போன பயில்வான் ரங்கநாதன், வணங்கான் படத்தின் பிரச்னைக்கான காரணத்தை அவர் பங்கிற்கு அவர் வெளியிட்டுள்ளார். இதோ அவருடைய விசாரணையில் தெரியவந்ததாக அவர் பேசியவை:
‘‘பாலா, அவரது சுய வாழ்வில், அவரது மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் இருந்தார். இதை அறிந்த சூர்யாவும், அவரது அப்பா சிவக்குமாரும், பாலாவை அழைத்து அவரை தேற்ற நினைத்தார்கள்.
அவரை வைத்து நன்றி கடனாக ஒரு படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்தார் சூர்யா. அப்படி தான் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியது. பிரம்மாண்ட செட் போட்டு, படத்தை தொடங்கினார்கள்.
படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமானார். எப்போதும், படப்பிடிப்பின் போது விடுதியில் அறை புக் செய்யும் போது, கதாநாயகன், கதாநாயாகி, இயக்குனர் எல்லாருக்கும் ஒரே இடத்தில் தான் அறை ஒதுக்குவார்கள்.
பாலா என்ன நினைத்தார் என தெரியவில்லை. தன்னுடைய அறைக்கு அருகில் கீர்த்தி ஷெட்டிக்கு அறை புக் செய்த பாலா, சூர்யாவுக்கு 15 கி.மீ., தொலைவில் அறை ஒதுக்கினார்.
‘என்னடா இது… நம்ம தானே முக்கியம்… இயக்குனர் கூட வெளியில் இருந்து வரலாமே’ என சூர்யாவுக்கு கோபம் ஏற்பட்டது. இதுவே ஒரு பெரிய சர்சையானது. இதைப் பற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை. ஏனென்றால், அது பலரின் நன்மதிப்பை குறைக்கலாம். அங்கு தான் முதல் சண்டை ஆரம்பித்தது.
அதன் பின் ஷூட்டிங் தொடங்கிய போது, பாலா தன்னுடைய வன்மத்தை கொட்டினார். பாலாவின் வன்மத்தை அறியாதவர்கள் சூர்யாவும், சிவக்குமாரும். தயாரிப்பாளர் என்கிற அடிப்படை மரியாதையை கூட சூர்யாவுக்கு பாலா தரவில்லை.
நந்தா படத்தின் போது இருந்த சூர்யாவைப் போலவே இப்போதும் அப்படியே சூர்யாவை அனுகியிருக்கிறார் பாலா. சூர்யாவை மரியாதை இல்லாமல் அழைத்ததும் ஒரு பிரச்னை தொடங்கியது.
அதன் பின் பிரிந்து மீண்டும் தொடங்க முயற்சித்த போது, கோவாவில் படப்பிடிப்பை தொடங்கலாம் என பாலா கூற, அதற்கு சூர்யா சம்மதம் தெரிவிக்கவில்லை. அதில் ஏற்பட்ட பிரச்னையில், அந்த படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது.
முதலில் தயாரிப்பாளிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு, அப்புறம் கதையை மாற்றுவது எப்படி? இது தவறு தானே. வணங்கான் படம் மீண்டும் தொடரும் என்கிறார் பாலா. அது எப்படி சாத்தியம். அந்த தலைப்பு சூர்யா நிறுவனத்திற்கு சொந்தமானது. அதை எப்படி பாலா பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே விக்ரமிடம் தகராறு, இப்போது சூர்யாவிடம் தகராறு, இனி யார் பாலாவிடம் போவார்? தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர் படம் எடுக்க முயற்சித்தால், யாரும் நிதி தரமாட்டார்கள். திட்டமிட்டு படம் எடுக்கமாட்டார். சொன்ன கதையை எடுக்கமாட்டார். இது பாலாவிடம் உள்ள பிரச்னை,’’
என்று வீடியோ ஒன்றில், பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.