தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!

Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!

Kathiravan V HT Tamil

Mar 22, 2024, 01:02 PM IST

“Thangar Bachan interview: தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது”
“Thangar Bachan interview: தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது”

“Thangar Bachan interview: தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது”

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பாஜக உடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் முனைவர் அ.கணேஷ் குமார், கடலூரில்  தங்கர் பச்சான், மயிலாடுதுறையில்   ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ:-

கேள்வி:- கடலூர் மக்களுக்காக கள செயற்பாட்டாளராக பணியாற்றி உள்ளீர்கள் தற்போது தேர்தலில் நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் கடலூர், விழுப்புரம் மக்களுக்காக களப்பணி செய்துள்ளேன். அம்மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இந்த மக்களுக்காக தேர்தலில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

கேள்வி:- தேர்தலில் நிற்பது தொடர்பாக பாமகவை நீங்கள் அனுகினீர்களா? அல்லது பாமக உங்களை அனுகியதா?

தேர்தலில் நிற்க வேண்டும் என்று நான் பாமகவை அனுகவில்லை; பாமக தரப்பில் இருந்து என்னிடம் ஒருவர் பேசினார். அதன் அடிப்படையில்தான் கடலூரில் போட்டியிடுகிறேன்.  

கேள்வி:- கடலூரில் பிரதான பிரச்னையாக எதை பார்க்கிறீர்கள்?

நெய்வேலியை பாலைவனம் ஆக்கிவிட்டு கையில் திருவோடு கொடுத்துவிட்டு போகப்போகிறது. ஏற்கெனவே எடுத்த நிலங்கள் போக மறுபடியும் நிலங்களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் உள்ள பிரச்னைகளை நான் சென்று நாடாளுமன்றத்தில் பேசினால் புரிய வைக்க முடியும். 

கடலூர் சிப்காட் சுற்றுசூழல் சீர்கேட்டு பகுதியாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். 

கடலூரில் அதிகம் விளையும் முந்திரி மூட்டை 6 ஆயிரம் ரூபாய் விற்கிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து நம் ஊர் விவசாயிகளை கொன்று கொண்டு இருக்கிறார்கள். 

பலா விளைச்சலால் யாருக்கும் 5 பைசா வருமானம் கிடையாது. விவசாயியாக உள்ள நான் களத்தில் இறங்கினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். 

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவது யாருக்கு சாதகமாக இருக்கும்?

இது சவாலாக இருக்க வாய்ப்பில்லை; ஆளாளுக்கு தலைமை ஏற்க வேண்டும் என துடிக்கிறார்கள். இதை கடந்துதான் வர வேண்டும். 

கேள்வி:- பாஜக உடன் பாமக கூட்டணி தமிழர்களுக்கு எதிரானது என்ற விமர்சனம் உள்ளதே?

அதெல்லாம் எனது தேர்தல் பரப்புரையில் பாருங்கள். இதை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது.  தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு என்ன நடந்து இருக்கு; தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

கேள்வி:- தேர்தலில் பாமகவுக்கு, உங்களும் உள்ள சவால் என கருதுவது எது?

சவால் என்று ஒன்றுமே இல்லை; எனக்கு மக்கள் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள். நான் இந்த மண்ணில் விளையாடிவன், தோப்பில் அலைந்தவன். நான் ஒந்த மண்ணின் விவசாயி, எனக்கு சவால் என்று எதுவும் கிடையாது. 

கடலூர் மக்களுக்கு என்ன என்பது புரிந்து இருக்கும், எதிரில் நிற்கும் வேட்பாளர்கள் எதற்காக நிற்கிறார்கள், நான் எதற்காக நிற்கிறேன் என்பது நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். 

அடுத்த செய்தி