2024 Lok Sabha: நாடாளுமன்றத் தேர்தல்! ஸ்கெட்ச் போட நாளை கூடுகிறது செயற்குழு
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கவும், இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை

ராஜ்நாத் சிங் - ஜே.பி.நட்டா - நரேந்திர மோடி - அமித்ஷா (PTI)
பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நாளை புதுதில்லியில் தொடங்குகிறது. தற்போது தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. 2024 லோக்சபா தேர்தல் முடியும் வரை அவர் கட்சியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளையதினம் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடிக்காக, படேல் சவுக் பகுதியில் இருந்து கூட்டம் நடக்கும் என்டிஎம்சி மையம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, இந்த கூட்டத்தில் நாடு எதிர்கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.
