தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam: மலையின் உச்சியில் அக்னியாய் காட்சியளித்த சிவபெருமான்

karthigai deepam: மலையின் உச்சியில் அக்னியாய் காட்சியளித்த சிவபெருமான்

Dec 06, 2022, 06:04 PM IST

திருவண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபமாய் ஒளி வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார்.
திருவண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபமாய் ஒளி வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார்.

திருவண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபமாய் ஒளி வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் குடிகொண்டிருக்கும் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் வழிபாடு செய்து அண்ணாமலைக்கு அரோகரா எனத் துதி பாடி வழிபாடு செய்கின்றனர்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis: சனி பகவான் மனசு வச்சுட்டார்.. எந்த 3 ராசிகாரர்கள் அதிர்ஷ்டத்தில் குதிக்கப் போகிறார்கள் பாருங்க!

May 07, 2024 12:15 PM

Money Luck: அட்சய திருதியை நாளில் வீட்டில் பண மழை கொட்டணுமா.. உணவு பொருட்களை வாங்கினால் ஜாக்பாட் தான்!

May 07, 2024 11:36 AM

Money Luck: 12 ஆண்டுகளுக்கு பின் வரும் நவ பஞ்சம யோகம்.. பணக்கடலில் குதிக்கும் 3 ராசிகள் இதோ! ஜாக்பாட் காத்திருக்கு!

May 07, 2024 10:15 AM

Love Horoscope Today :புதிய உறவில் ஈடுபடுவதற்கான நேரம் இது.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்குமான இன்றைய காதல் ராசிபலன்!

May 07, 2024 08:57 AM

Amavasya : பித்ருதோசம், காலசர்ப்ப தோசம், சனிதோசத்தில் இருந்து விடுபட வேண்டுமா.. அமாவாசையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

May 07, 2024 07:02 AM

Today Rasi Palan : 'தொட்டதெல்லாம் வெற்றிதான்.. பணம் கொட்டு பாருங்க' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 07, 2024 05:56 AM

சிவபெருமானும், முருகனும் அக்னியின் சொரூபமாகக் கூறப்படுகிறது. இவர்களைச் சிறப்பாக வழிபாடு செய்யும் நாளாக கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. சிவாலயங்களில் அக்னி ஸ்தலமாகக் கூறப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சிவன் குடி கொண்டிருக்கும் மலையாகக் கருதப்படுகிறது.

மலையின் உச்சியில் மாபெரும் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதைக் காண்பதற்காகத் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளுழத்தப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இறைவன் ஜோதி வடிவாய் திருவண்ணாமலையில் காட்சியளிக்கிறார் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த கார்த்திகை மகா தீபத் தீபத் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு பலர் தங்களது வீட்டில் தீபம் ஏற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்குச் சிவபெருமான் ஒளி வடிவாய் காட்சி தருகிறார். இந்நிலையில் பக்தர்களும் தங்களது வீட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி வருகின்றனர்.