மதுரை சம்பவம்; குஜராத் மாணவியை சீரழித்த தமிழ்நாடு மாணவர்கள்
Madurai Sexual harassment: மதுரையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியைத் தமிழ்நாடு மாணவர்கள் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் மதுரையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இவர் ஆன்லைனில் சார்ட்டட் அக்கவுண்ட் படித்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்னையைத் தேர்ந்த அஷீஷ் ஜெயின் என்ற மாணவரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன் என்ற மாணவரும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.
ஒரே விடுதியில் தங்கி இருந்த காரணத்தினால் அந்த மாணவியுடன் இரண்டு பேரும் அறிமுகமாகியுள்ளனர். அப்போது திடீரென அந்த மாணவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இரண்டு மாணவர்களும் அந்த மாணவிக்கு மருந்தும், உணவும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வாங்கி கொடுத்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்துள்ளார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மாணவியை அந்த மாணவர்கள் இரண்டு பேரும் தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
வேலைகள் முடிந்து அந்த மாணவி குஜராத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அங்கே அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக மதுரையில் புகார் அளிக்கச் சொல்லிக் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்குப் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து மதுரை உதவி ஆணையர் காமாட்சி, வீடியோ கால் மூலம் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதன் பின்னர் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குஜராத் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.