Salem : ’50 பவுன் பத்தாது.. இன்னும் கொண்டு வா’ மனைவியை பாத்ரூம்மில் பூட்டி வைத்த பல் டாக்டர்!
கூடுதல் நகைகள் கேட்டு மனைவியை கழிப்பறைக் குள் பூட்டி வைத்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40). பல் டாக்டர். இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லீலாதேவி (30). இவர் சேலம் அழகாபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் தனக்கும், பல் டாக்டர் சிவகுமாருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது என்னுடைய பெற்றோர் எனக்கு 50 பவுன் வர தட்சணையாக கொடுத்தனர். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக என்னுடைய கணவர், கூடுதல் நகைகள் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். சம்பவத்தன்று நகைகள் கேட்டு அடித்து என்னை வீட் டில் உள்ள கழிவறைக்குள் தள்ளி பூட்டி விட்டார். நான் சென்னையில் உள்ள எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன்.
அவர்கள் வந்து என்னை மீட்டனர். என்னை அடித்து துன்புறுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். அதன் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் டாக்டர் சிவகுமாரை கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்