தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime திருநம்பியை மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்த சகோதரர்கள்.. காரணம் இதுதான்!

Crime திருநம்பியை மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்த சகோதரர்கள்.. காரணம் இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 21, 2023 08:33 AM IST

இளம் பெண்ணை அடைவதற்கு தடையாக இருந்த திருநம்பியை கொலை செய்த ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சா கவுண்டன் பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தேனியைச் சேர்ந்த கவி. 20 வயதான இவர் திருநம்பியாக இருந்தார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை. மற்றொரு திருநம்பியான ஜீவா மற்றும் ஒரு இளம் பெண்ணுடன் அறை எடுத்து வசித்து வந்தார்.

கவி பெண்ணாகப் பிறந்து இருந்தாலும் திருநம்பியாக மாறி வாழ்ந்து வந்தார். இவர்கள் மூன்று பேரும் அந்த பகுதியில் உள்ள மில்லில் பணி செய்து வந்தனர். திருப்பூர் மாவட்டம் மூங்கில் தொழுவு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது தம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமையல் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இரண்டு பேரும் விவசாயத்திற்கான சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணிக்கும் சென்றனர்.

இந்தப் பணிக்கு கவி மற்றும் அவருடன் வசித்த இரண்டு பேரும் சென்றனர். சந்திரசேகருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் அவரது மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டார். மனைவி இறந்த நிலையில் கவியுடன் வசித்து வரும் இளம் பெண்ணை திருமணம் செய்ய சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய திட்டமிட்டனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி முதல் திருநம்பி கவி மாயமானார்.

இது குறித்து அவருடன் தங்கி இருந்த இளம் பெண் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சந்திரசேகர் மற்றும் அவரது தம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து அடுத்த நாள் விசாரணைக்கு வரும்படி போலீசார் கூறியிருந்தனர். ஆனால் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகினர். இதை அடுத்து இன்ஸ்பெக்டர் மாதையின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடக்கிவிடப்பட்டது. 

இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்த ராதாகிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருநம்பி கவியை மோட்டார் அறையில் வைத்து மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்தோம். பின்னர் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்று திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தொப்பை நாயக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து எரித்து சாம்பலாக்கினோம் என்று தெரிவித்தார். 

இதையடுத்து இளம் பெண்ணை அடைவதற்கு தடையாக இருந்த திருநம்பியை கொலை செய்த ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்