பஞ்சாப் ராணுவ முகாம் மீது தாக்குதல்:4பேர் பலி தீவிரவாத தாக்குதல் இல்லை-காவல்துறை
Punjab: 2 நாட்களுக்கு முன் 28 குண்டுகள் நிரம்பிய ஒரு துப்பாக்கி காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ராணுவ முகாம் மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறையினர் முதல்கட்டமாக அறிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது. விரைவு நடவடிக்கைக் குழு தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமிற்குள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாம் மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு குறைவு ஏற்கனவே அங்கு 2 நாட்களுக்கு முன் 28 குண்டுகள் நிரம்பிய ஒரு துப்பாக்கி காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் யாரேனும் ஈடுபட வாய்ப்பு உள்ளது என காவல்துறையினர் கருதுகின்றனர். இதையடுத்து ராணுவ முகாமின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்