தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deepam Latest Episode Update

Karthigai Deepam: சடலத்தை அடையாளம் காண வந்த கார்த்திக்.. அது அபிராமியா…? பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 28, 2024 05:21 PM IST

கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலையும் போது, வழியில் ஒரு பெண்மணியை பார்க்க சந்திக்க நேர்கிறது. அவர் அபிராமியை போலவே நடந்து செல்ல, கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச முயற்சிக்கிறான். ஆனால், அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க, அது அபிராமி இல்லை என்று தெரிந்து, நிம்மதி அடைகிறான்; உடனே வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல, எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். ஆனால் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் கடுப்பாகின்றனர்.

இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலையும் போது, வழியில் ஒரு பெண்மணியை பார்க்க சந்திக்க நேர்கிறது. அவர் அபிராமியை போலவே நடந்து செல்ல, கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச முயற்சிக்கிறான். ஆனால், அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது.

பிறகு மீண்டும் அபிராமியை தேடி கார்த்திக் செல்லும் போது வழியில், காரின் குறுக்கே கார்த்தி பாட வைத்த துப்புரவு பணியாளர் ராணி வருகிறாள். கார்த்திக் அவளை காப்பாற்றுகிறான். 

அடுத்து கோயிலுக்கு வரும் கார்த்திக் கடவுளிடம், அபிராமி கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறான். மேலும் அம்மாவுடனான சிறு வயது நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்குகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் அபிராமி காணாமல் போன விஷயத்தை சொல்ல, அண்ணாமலை உடனடியாக போலீஸில் கம்பளைண்ட் கொடுத்து யாருக்கும் தெரியாமல் தேட சொன்னார். கார்த்திக்கும், போலீசுக்கு தகவல் கொடுத்து தேட சொல்ல, அவர்கள் வெளியில் தெரியாமல் தேடுவதாக சொல்கின்றனர்.

இதற்கிடையே, ரயில்வே ட்ராக் அருகே அடிபட்டு டெட் பாடி ஒன்று கிடக்க, அதனை பார்த்த மக்கள் பணக்கார வீட்டு பொம்பளையா தெரியுது… என்ன கஷ்டம்னு தெரியல இப்படி வந்து சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நேரத்தில் அங்கு வரும் ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஸ்ஸிங் கேஸ் ஏதாச்சு இருக்கா என்று கேட்க, இருக்கு சார்.. ஆனா அது நம்ம ஏரியா இல்ல என்று அபிராமி குறித்த விஷயத்தை சொல்கிறார்.

இதையடுத்து போலீசார் சால்வையுடன் அபிராமி வீட்டுக்கு வர அந்த சால்வையை பார்த்ததும், அண்ணாமலை கதறி அழுகிறார். பிறகு போலீஸ் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று, ரயில்வே ட்ராக் அருகில் டெட் பாடி இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள் . இதைக்கேட்ட கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

பிறகு எல்லோரும் என்னாச்சு என்ன விஷயம் கேட்க, இன்னொரு பக்கம், எதுக்கு போலீஸ் கார்த்தியை தனியா கூட்டிட்டு போய் பேசுகிறார் என்று ஆனந்த் கேள்வி கேட்டு சத்தம் போடுகிறான். இதைக்கேட்ட கார்த்திக் நான் கொஞ்சம் வெளியே போறேன் போயிட்டு வந்து சொல்வதாக சொல்கிறான். 

ஆனால், ஆனந்தோ இப்பவே சொல்லு என்று சண்டையிட, போலீஸ் டெட் பாடி குறித்த விஷயத்தை சொல்கின்றனர். இதனைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து டெட் பாடியை அடையாளம் காண்பதற்காக கார்த்திக்கை அழைத்து செல்வதாக சொல்கின்றனர்.

ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் இந்த செய்தியை கேட்டு சந்தோஷப்பட்டு ரூமுக்கு சென்று அபிராமி கதை முடிந்தது, சொத்துக்களை நம்ம பேருக்கு மாற்றுகிற வேலைய பாக்கணும் என்று ப்ளான் போடுகின்றனர். டெட் பாடியை பார்க்க வந்த கார்த்திக் கண்ணீருடன் காரில் இருந்து கீழே இறங்கி சம்பவ இடத்தை நோக்கி நகர்ந்தான் 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்