தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: ‘மோடி உடன் கைக்கோர்க்கும் நவீன்!’ தேசிய அரசியலில் அடுத்த ட்விஸ்ட்! ஒடிசா அரசியலில் திருப்பம்!

Lok Sabha Election 2024: ‘மோடி உடன் கைக்கோர்க்கும் நவீன்!’ தேசிய அரசியலில் அடுத்த ட்விஸ்ட்! ஒடிசா அரசியலில் திருப்பம்!

Kathiravan V HT Tamil
Mar 07, 2024 03:34 PM IST

”சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பிஜு ஜனதாதளத்திற்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை பாஜகவுக்கு ஆதரவாகவும் அமைக்கும்படி கூட்டணி கணக்குகள் இருக்கலாம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது ”

பிரதமர் நரேந்திர மோடி - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்
பிரதமர் நரேந்திர மோடி - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் (ANI Photo)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புதிய கூட்டணிக்கான முயற்சி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸில் பிஜு ஜனதா தள தலைவர்கள் ஒரு நீண்ட கூட்டத்தை நடத்தினர். அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் தேசிய தலைநகரில் இதேபோன்ற அமர்வை நடத்தி, கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உட்பட தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, பிஜு ஜனதா தளம் துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை ஒப்புக் கொண்டார். ஆனால் அதன் உருவாக்கத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்துவதைத் தவிர்த்தார். செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, "ஒடிசா மக்களின் நலன்களுக்கு பிஜு ஜனதா தளம் முன்னுரிமை அளிக்கும். ஆம், கூட்டணி விவகாரம் குறித்து விவாதங்கள் நடந்தன என கூறி உள்ளார். 

மிஸ்ரா மற்றும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த பொதுச் செயலாளர் அருண் குமார் சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் உத்தி குறித்து பிஜு ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று விரிவான விவாதம் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டது. 

டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜுவல் ஓரம் பிஜு ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து விவாதித்ததை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் கட்சியின் மத்திய தலைமை இறுதி முடிவை எடுக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜகவை "ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்" என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கொண்டதாக காட்டியது “நிழலில் குத்துச்சண்டை போடுவது போன்றது என அக்கட்சி விமர்சித்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பிஜு ஜனதா தளமும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். பிஜு ஜனதா தளம் எப்போதும் நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்து வருகிறது. மேலும் மாநிலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் காட்டும் எதிர்ப்பு வெறுமனே நிழல் குத்துச்சண்டை மட்டுமே. பையிலிருந்து பூனை வெளியே வருவது போலிருக்கிறது என கூறி உள்ளார். 

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பிஜு ஜனதாதளத்திற்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை பாஜகவுக்கு ஆதரவாகவும் அமைக்கும்படி கூட்டணி கணக்குகள் இருக்கலாம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 

WhatsApp channel