EPS Vs BJP: ’டேய் உன்னை போல எத்தனை பேர பாத்து இருப்போம்!’ பாஜக சீனிவாசனை பிரித்து மேய்ந்த ஈபிஎஸ்!
”இந்த தேர்தலோடு உன்னை போல் வெற்று அரசியல் செய்யும் நபர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - பாஜக வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக கம்பெனியின் முதலாளிகளாக உள்ளனர். ஆனால் அதிமுகதான் மக்களுக்காக எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கம். அதிமுக என்ற கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு சர்வாதிகாரமாக மாறிவிடும்.
தேர்தல் நேரத்தில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் என்னை பற்றியும், அதிமுகவை பற்றியும் திட்டமிட்டு அவதூறு செய்து வருகின்றனர். 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுக பொதுச்செயலாளர் என்பதை விட உங்களில் ஒருவன் என்பதில்தான் எனக்கு பெருமை.