தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  J&k Encounter: பாகிஸ்தான் தீவிரவாதியிடமிருந்து 11 வயது சிறுவர்கள் மீட்பு

J&K encounter: பாகிஸ்தான் தீவிரவாதியிடமிருந்து 11 வயது சிறுவர்கள் மீட்பு

Nov 11, 2022, 11:17 PM IST

ஜம்மு - காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் கூட்டாக இணைந்து பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சோபியான மாவட்டத்தில் நடைபெற்ற இந்த என்கவுண்டரில் அருகே அமைந்திருந்த மதராசாவில் தீவிரவாதிகளால கடத்தி வைக்கப்பட்டு கையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த 11 வயது சிறுவர்கள் இருவர் மீட்கப்பட்டனர். முன்னதாக தீவிரவாதி ஒருவர் இந்தப் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அந்தப்பகுதி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிறப்பு அக்கறையும் மேற்கொண்டு எதிராளியை வீழ்த்த ராணுவத்தினர் திட்டமிட்டு செயல்படுத்தினர். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஒரு ஏகே சீரிஸ் ரைபிள் உள்பட சில போர் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.