தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Doctor Suspended: பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர் அதிரடி சஸ்பெண்ட்!

Doctor Suspended: பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர் அதிரடி சஸ்பெண்ட்!

Karthikeyan S HT Tamil

Jun 01, 2023, 02:08 PM IST

Chengalpattu Government Medical College: பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Chengalpattu Government Medical College: பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Chengalpattu Government Medical College: பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் மருத்துவர் ஜிதேந்திரன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். மிக முக்கிய மருத்துவமனையாக உள்ள இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் பெண் மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் மூத்த மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்