தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mnm : ஆட்டோவிற்கான கட்டணங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் - மநீம

MNM : ஆட்டோவிற்கான கட்டணங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் - மநீம

Divya Sekar HT Tamil

Aug 17, 2022, 09:55 AM IST

ஆட்டோ மற்றும் டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலனை கருத்தில் கொண்டு புதியதொரு செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
ஆட்டோ மற்றும் டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலனை கருத்தில் கொண்டு புதியதொரு செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

ஆட்டோ மற்றும் டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலனை கருத்தில் கொண்டு புதியதொரு செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை : ஆட்டோவிற்கான கட்டணங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்களுக்கான பொது போக்குவரத்தில் பேருந்து, ரயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக தினசரி பெரும்பங்காற்றி வரும் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு குறைந்தபட்ச தூரமான 1.8 கிலோமீட்டருக்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் 3.50 என நிர்ணயம் செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

ஆனால் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட வாகன எரிபொருட்களின் விலையும், ஆட்டோக்களுக்கான காப்பீட்டுத் தொகையும் பன்மடங்கு உயர்ந்துள்ள போதும் கூட ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தொலைதூரங்களுக்கேற்றவாறு கட்டணங்களை காட்டும் டிஜிட்டல் மீட்டர், ஆட்டோக்களில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரசீது கொடுக்க பிரிண்டர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஜீபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என 2013ஆம் ஆண்டு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு “பெட்ரொல், டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்டகால நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் தமிழக அரசோ இதுவரை அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதை மக்கள் நீதி மய்யம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே ஒருபுறம் இணையதள வசதிகள் மூலம் பயணிகளுக்கு ஆட்டோ சேவையை வழங்கி வரும் ஓலா, உபர் உள்ளிட்ட பல்வேறு இணையதள நிறுவனங்களால் தனித்து செயல்படும் ஆட்டோ உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தொழில் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருவதோடு ஆட்டோவிற்கான வங்கித் தவணைகளையோ, பராமரிப்பு செலவினங்களையோ ஈடுசெய்ய முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் மற்றொரு புறமோ பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட வாகன எரிபொருட்களின் விண்ணைத் தொடும் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே பெட்ரோல், டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அளித்த உத்தரவை இனியும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்துவதோடு ஆட்டோ கட்டணத்தில் குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கிலோமீட்டருக்கு ரூபாய் 50 ரூபாயும், அதற்குப் பிறகான ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாயும், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கான காத்திருப்பு கட்டணத்தை ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ரூபாய் 5 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் என்கிற உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஆலோசனையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அத்துடன் அண்டை மாநிலமான கேரளாவில் மாநில அரசே ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் உருவாக்கியுள்ள செயலியைப் போன்று தமிழக அரசும் ஆட்டோ மற்றும் டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலனை கருத்தில் கொண்டு புதியதொரு செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.