தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காவலர்களுக்கு அபராதம் - ஒதுங்கிய உயர்நீதிமன்றம்!

காவலர்களுக்கு அபராதம் - ஒதுங்கிய உயர்நீதிமன்றம்!

Feb 25, 2023, 01:32 PM IST

Fines For police officers: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Fines For police officers: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Fines For police officers: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொய் வழக்குப் பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அபராதம் விதித்திருந்தது. நாணயம் விதித்து அபராதத்தை ரத்து செய்யக் கூடிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

கடந்த 2019 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின் பாபு என்பவர் தனது நண்பர் அசோக் என்பவருடன் டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி பிரவீனை அந்த பணியிலிருந்த காவலர் பாலு தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை பிரவீன் நண்பர் அசோக் செல்போனில் வீடியோ எடுத்ததால் அவரையும் காவலர் பாலு தாக்கியுள்ளார். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூன்று காவலர்களுடன் சேர்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவரும் நீதிபதி முன்பு அவத்திரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணையம், காவலர்களால் தாக்கப்பட்ட இருவர்களின் மீதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. எனவே இருவர்களுக்கும் தல ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டு இந்த தொகையை நான்கு காவலர்களிடமிருந்தும் வசூல் செய்ய உத்தரவிட்டது.

அதேசமயம் நான்கு காவலர்கள் மீதும் துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து நான்கு காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள்," போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாகத் தெரியவந்துள்ளது. மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

டாபிக்ஸ்