தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Girl: கத்துனதுனால தப்பிச்சேன் - நண்பனின் பெண்ணுக்குத் தொந்தரவு!

School Girl: கத்துனதுனால தப்பிச்சேன் - நண்பனின் பெண்ணுக்குத் தொந்தரவு!

Mar 28, 2023, 01:43 PM IST

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே உள்ள திருமலை பாளையத்தில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்த மாணவியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் மாணவி தந்தையின் நண்பரான காளீஸ்வரன் என்பவர் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அங்கே வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த காளீஸ்வரன் மாணவியரிடம் உனது தந்தை எங்கே என்று கேட்டுள்ளார். தனது தந்தையும் தாயும் வேலைக்குச் சென்று விட்டதாக அந்த மாணவி அவரிடம் கூறியுள்ளார். பின்னர் காளீஸ்வரன் அந்த மாணவியரிடம் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு எனக் கேட்டுள்ளார்.

தண்ணீர் எடுப்பதற்காக அந்த மாணவி வீட்டிற்குள்ளே சென்றுள்ளார். அப்படியே காளீஸ்வரனும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த காளீஸ்வரன். தனது நண்பரின் மகள் என்று கூட பாராமல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

காளீஸ்வரனின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார். அந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனியாக இருந்த பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளீஸ்வரன் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் தலைமறைவாக இருந்த காளீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் காளீஸ்வரனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையானது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கான தண்டனைகள் கடுமையாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை குறையாமல் இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரள மாநிலத்திலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நிகழ்ந்த வருகின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்