தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  முடி உதிர்வு பிரச்சனை - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

முடி உதிர்வு பிரச்சனை - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Jul 03, 2022, 02:22 PM IST

கர்நாடகாவில் முடி உதிர்வு பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முடி உதிர்வு பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முடி உதிர்வு பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராகவேந்திரா விரிவாக்கம் பகுதியை சேர்ந்த காவ்யாஸ்ரீ (21). இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

தொடர் முடி உதிர்வு காரணமாக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துவந்தார். இருப்பினும் தொடர்ந்து முடி கொட்டி வந்தது. ஒரு கட்டத்தில் வழுக்கை ஏற்பட்டுள்ளது.

இதனால் காவ்யாஸ்ரீ மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 2) வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து நசராபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் ச விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முடி உதிர்வால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்