தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கேரளாவில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா – தமிழகத்திலும் அதிகரிக்கும் அபாயம்

கேரளாவில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா – தமிழகத்திலும் அதிகரிக்கும் அபாயம்

Priyadarshini R HT Tamil

Mar 31, 2023, 11:31 AM IST

Corona Updates : கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 765 புதியகொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
Corona Updates : கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 765 புதியகொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Corona Updates : கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 765 புதியகொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும்கொரோனா பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கூறுகையில், "மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. எனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஓமிக்ரான் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மரபணு வரிசைமுறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன“ என்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு மாதத்தில் 20 கொரோனா இறப்புகள் நடந்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஐசியூவில் உள்ள பெரும்பாலான நோயாளிகளும்வயதானவர்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம்போன்ற நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.தொடர்ந்து 

இந்தியாவில் ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,095ஆக உள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. நோயிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,41,69,711 ஆகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் உள்ளது. ஒரே நாளில் 3,095 புதிய கோவிட் தொற்றாளர்கள் தோன்றியதை அடுத்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. 5 பேர் இறந்ததையடுத்து கொரோனாவால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 5,30,867 ஆக உள்ளது. கோவா மற்றும் குஜராத்தில் ஒருவரும், கேரளாவில் 3 பேரும் இறந்துள்ளனர். கோவிட் தொற்று ஏற்பட்டு மீள்பவர்கள் 98.78 சதவீதமாக உள்ளது. 6 மாதத்திற்கு பின்னர் ஒரே நாளில் 3,016 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடைசியாக அக்டோபர் 2ம் தேதி 3,375 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்