தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tamil Scientist Invents Diabetes Control Strips

diabetes control- நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்க தமிழர் தந்த பரிசு

I Jayachandran HT Tamil

Dec 03, 2022, 10:26 PM IST

நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஒரு தமிழர் உருவாக்கியுள்ளார்.
நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஒரு தமிழர் உருவாக்கியுள்ளார்.

நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஒரு தமிழர் உருவாக்கியுள்ளார்.

* நீரிழிவு நோயாளிகளுக்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சரத் ஸ்ரீராம் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம், பெரும் வரப்பிரசாதமாக மாற உள்ளது. வாழ்வியல் மருத்துவத்துக்கான யுரேகா விருது 2022ஐ சரத் ஸ்ரீராம் வென்றுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!

Weight Loss Tips: உடல் எடை குறைக்க உதவும் சைக்கிள், நீச்சல் பயிற்சி! இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா

Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?

Relationship : உணர்வுகளை தீர்மானிக்கும் அனுபவங்கள்! உறவுகளை மேம்படுத்த எப்படி உதவும்? விளக்கம்!

* நீரிழிவு - உடலில் சர்க்கரையின் அளவு கூடுவதால் ஏற்படும் விளைவை டயாபடீஸ் அல்லது நீரிழிவு நோய் என அழைக்கிறோம்.

* உண்மையில் இது ஒரு குறைபாடு என்றாலும் கூட இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய வியாதியாக இது உருவாகியுள்ளது.

* 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில், சுமார் 8.8 சதவீதம்.

* பெரும்பாலும் நீரிழிவு நோயைக் கண்டறிய, உலகம் முழுவதும், ரத்தத்தை சோதனை செய்யும் முறையே பயன்பாட்டிலிருந்து வருகிறது.

* வீட்டிலேயே நீரிழிவு நோயைக் கண்டறிய பயன்படுத்தப்படும், எளிய இயந்திரங்களிலும் கூட ரத்தத்தை ஊசியால் குத்தி எடுத்து அதைக்கொண்டே சோதனை செய்ய வேண்டியுள்ளது.

* இதனால் வலி, உட்பட பல்வேறு உப பிரச்சனைகள் வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர்.

* இந்தக் குழுவில் முக்கிய பங்காற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரத் ஸ்ரீராம். சென்னையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்து, கோவையில் படித்து, தற்போது ஆஸ்திரேலியாவில் பயணியாற்றி வருகிறார் சரத்.

* அவரது கண்டுபிடிப்புமூலம், வெல்குரோ போன்ற பட்டை ஒன்றை உடலில் ஒட்டிவிட்டாலே போதுமானது. அதில் அமைக்கப்பட்டுள்ள சென்சார்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் என்கிறார் சரத்.

* சமீப காலமாக, சிறு குழந்தைகளும் கூட, சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், சரத் மற்றும் அவரது குழுவின் கண்டுபிடிப்பு, பேருதவியாக இருக்கப்போகிறது என்கிறது மருத்துவ உலகம்.

* ரத்தத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி சோதனை செய்வதின் மூலம் உளவியல் ரீதியாகவும், அவர்கள் விரைந்து குணமடைய வாய்ப்பு உருவாகும் என்கிறார் சரத்.

* இந்த பட்டையை கரோனா நோயை கண்டறியவும், பயன்படுத்த முடியும் என்பது அதன் தனிச்சிறப்பாகும்.

* நோய் நாடி குணம் நாடுதல் என்று வரும்போது, சரத்தின் இந்தக் கண்டுபிடிப்பு, நடைமுறைக்கு வரும்போது, இது ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பெரும் வரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.