தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Covishield: ’கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்த உறைதல் ஏற்படுமா?!’ உண்மை என்ன? யாருக்கு உண்மையான பாதிப்பு ஏற்படும்!

Covishield: ’கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்த உறைதல் ஏற்படுமா?!’ உண்மை என்ன? யாருக்கு உண்மையான பாதிப்பு ஏற்படும்!

Kathiravan V HT Tamil

May 04, 2024, 06:45 AM IST

”ஐ.சி.எம்.ஆர் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்ததாகவும், கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்து உள்ளது” (HT_PRINT)
”ஐ.சி.எம்.ஆர் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்ததாகவும், கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்து உள்ளது”

”ஐ.சி.எம்.ஆர் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்ததாகவும், கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்து உள்ளது”

கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதில் இருக்கும் பின்னணி குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கி இருக்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Health Alert : பேக்கிங் உணவுகளால் உயரும் சர்க்கரை அளவு.. அதிகரிக்கும் குழந்தைகளின் உடல் எடை!

Fatty Liver in Diabetics: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.. நீரிழிவு மற்றும் உடல் பருமன் வரை.. இந்த விஷயத்தில் கவனம் தேவை!

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Garlic Peel : இந்த விஷயம் தெரிஞ்சா இனி பூண்டு தோலை கீழ போட மாட்டீங்க.. நீங்கள் இழக்கும் சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

அதில், ”2021ஆம் ஆண்டிலேயே இது குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு TTS எனப்படும் ரத்த குழாய்களில் ரத்த உறைதல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நமது ரத்த குழாய்களில் வெயின் மற்றும் ஆர்ட்டிரி என்ற இரண்டு வகை ரத்த குழாய்கள் உள்ளன” என மருத்துவர் அருண் குமார் கூறி உள்ளார். 

”இதயத்திற்கு ரத்தம் சப்ளை செய்யும் ஆர்ட்டிரி என்ற ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு உண்டாவது என்று பொருள் ஆனால் TTS எனப்படும் நோயில், வெயின் எனப்படும், மூளை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளில் இருந்து இருந்து இதயத்திற்கு ரத்த குழாய்களில் DEEP VEIN THROMBOSIS, CEREBRAL VENOUS THROMBSIS போன்ற பகுதிகளில் தடுப்பூசி போட்டு 4 முதல் 28 நாட்களில் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவிர தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல், காலில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும். இதற்கு மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை” என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

”ஐ.சி.எம்.ஆர் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்ததாகவும், கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்து உள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் ரத்த உறைதல் மற்றும் மாரடைப்பு வருவதற்கான ஆபத்துக்களை சமீபத்தில் அதிகப்படுத்தி உள்ளது” என மருத்துவர் அருண் குமார் கூறி உள்ளார்.  

கோவிஷீல்டு பிரச்னை வெடித்தது எப்படி?

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா (AZ) அதன் கோவிட் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" ரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை கூறி உள்ளதாக நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. 

கோவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (டி.டி.எஸ்) உடன் த்ரோம்போசிஸை ஏற்படுத்தக்கூடும் என்று பிப்ரவரியில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில் 'தி டெய்லி டெலிகிராப்' தெரிவித்து இருந்தது. 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த ஏஇசட் வாக்ஸெவ்ரியா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்று அழைக்கப்படுகிறது.

"AZ தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டி.டி.எஸ்ஸை ஏற்படுத்தும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான காரண காரிய வழிமுறை அறியப்படவில்லை. மேலும், AZ தடுப்பூசி இல்லாத நிலையிலும் TTS ஏற்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி