Tamil Latest News Updates: அரசு பங்களாவை காலி செய்கிறேன் - ராகுல்காந்தி கடிதம்!
Mar 29, 2023, 06:39 AM IST
இன்று (28-03-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று (மார்ச் 29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 312 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அரசு பங்களாவை காலி செய்கிறேன் - ராகுல்காந்தி
அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை துணை செயலருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இபிஎஸ்-க்கு அண்ணாமலை வாழ்த்து
அதிமுக பொதுச் செயலலாளராக அறிவிக்கப்பட்டுள்ள இபிஎஸ்-க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
போலி பாஸ்போர்ட் வழக்கு-மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
போலி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில், மதுரை மாநகர் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பாக மாட்டார் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலி
சவுதி அரேபியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியாகினர்.
ரஜினி மகள் வீட்டில் திருட்டு - பெண்ணிடம் விசாரணை
ரஜினி மகள் வீட்டில் திருட்டு - பெண்ணிடம் விசாரணை
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடு போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டில் ஈடுபட்ட பெண்ணை விசாரிக்க காவல்துறையினர் 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
3.17 மணி நேரம் பேசிய முதல்வர்!
மேகாலயா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து 3.17 மணி நேரம் தொடர்ந்து பேசினார் முதலமைச்சர் கான்ராட் சங்மா.
8 மாநிலங்களை விட தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறைவு - அமைச்சர் பிடிஆர்
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களோடு, ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறைவாகவே உள்ளது என பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள இலங்கை தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள 3ம் மணல் திட்டில் இலங்கையில் இருந்து அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் இன்று 8 பேர் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
பிபிசி பஞ்சாபி நியூஸ் டிவிட்டர் பேஜ் நிறுத்தம்
பஞ்சாபி மொழியில் செய்தி வழங்கிவரும் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான பிபிசி பஞ்சாபி செய்தியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள் அந்த டிவிட்டர் கணக்கை அணுக முடியாது.
OPSக்கு பின்னடைவு! நீதிமன்றம் அதிரடி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் ஓபிஎஸ் தரப்பின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்.
ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது!
ஏப்ரல் 4ம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
அதிமுக பிரமுகர் கொலை - சிறுவன் உட்பட 5 பேர் கைது
பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் (48) வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), சிறுவன் உட்பட 5 பேர் கைது. ஒரு ஆட்டோ, 5 பட்டா கத்திகள் பறிமுதல்.
ஈக்வடாரில் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர்.
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. இயந்திரத்தை கல்லால் உடைக்க முயன்ற மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோள்களை நேரில் காணும் அற்புத நிகழ்வு
சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் யுரேனஸ் கோள்களை நேரில் காணும் அற்புத நிகழ்வு இன்று நடக்கிறது
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடக்கிறது
அதிமுக வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்.
பங்குனி உத்திர திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் இன்று போராட்டம்!
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் கூட்டுறவு சங்கங்கள் முன் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் இன்று போராட்டம் ந்டத்தவுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?
சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 311ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.