Coimbatore: மது போதையில் ஏற்பட்ட தகராறு-வாலிபரை குத்தி கொலை செய்தவர் கைது
Mar 19, 2023, 03:49 PM IST
பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்
கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, வெள்ளலூர் கக்கன் வீதியைக் சேர்ந்த கோபிநாத். மனைவி ஜோதி , மகன் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கோபிநாத் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் பணி புரியும் முல்லை நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர். இரவு மதுரை வீரன் கோவில் அருகே இருவரும் மது அருந்து விட்டு பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது போதையில் இருவருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முனியப்பன், கோபிநாத் மார்பில் கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போத்தனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் கோபிநாத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பதியில் பெரும் அதிர்ச்சிலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்