பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடல் ரிலீஸ் அறிவிப்பு
Aug 17, 2022, 05:15 PM IST
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரேநாளில் யூ- டியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடலான, ‘சோழா சோழா’ வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதனை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து உள்ளது.
டாபிக்ஸ்