தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பொன்னியின் செல்வன் - ஒரு பாடல் எடுக்க 25 நாட்களா?

பொன்னியின் செல்வன் - ஒரு பாடல் எடுக்க 25 நாட்களா?

Aarthi V HT Tamil

Jul 14, 2022, 01:09 PM IST

பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 300 நடனக் கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 300 நடனக் கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் 300 நடனக் கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.

கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் படமாக இயக்கி இருக்கிறார். சமீபத்தில் அதன் பிரமாண்ட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

பார்வையாளர்களால் பரவலாக விரும்பப்பட்ட இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. 

செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.

ஒரு பாடலில் மட்டும் 300 நடன கலைஞர்கள்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு மட்டும் 300 நடனக் கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். மும்பையில் இருந்து மட்டும் 100 நடனக் கலைஞர்கள் வந்திருக்கின்றனர். 

அந்த ஒரு பாடலை படமாக்க மட்டும் 25 நாட்களுக்கு மேலானது. மேலும் ஆறு முதல் ஏழு ஷெட்யூல்களுக்கு இடையில் பாடல் படப்பிடிப்பை மட்டும் முடிக்க வேண்டியிருந்தது. இது ஒரு பிரமாண்ட செட் மற்றும் பாடலாக உருவாகி இருந்தது. 

மணிரத்னத்தின் கனவுத் திட்டம்

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் படம் வெளியாகவுள்ளது.  இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 மணிரத்னத்தின் கனவுத் திட்டமான இந்த படத்தை பத்தாண்டுகளுக்கும் மேலாக இயக்க முயன்று வந்தார். ஆனால் பட்ஜெட் காரணமாக இத்தனை ஆண்டுகளாக படம் எடுக்க முடியாமல் போனது. தற்போது தான் அந்த கனவு நினைவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி