தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bollywood Actor Akshay Kumar Was Seriously Injured In A Fight Scene While Shooting

படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!

Mar 25, 2023, 10:55 AM IST

Actor Akshay Kumar Injured: படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Actor Akshay Kumar Injured: படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Actor Akshay Kumar Injured: படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் முக்கிய கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் இயக்குநர் சங்கர் எடுத்த 2.0 என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

RIP Uma Ramanan : பாடகி உமா ரமணன் டாப் 10 ஹிட் தமிழ் பாடல்கள்.. பூங்கதவே தாள் திறவாய் முதல் ஆனந்த ராகம் வரை!

Dheena Re Release: ‘டேய் பாட்ட மாத்து’.. தீனா இடைவேளையில் விஜய் பாட்டு..கொந்தளித்து சட்டையைக்கழற்றிய அஜித் ரசிகர்கள்!

Metti Oli Shanthi: ‘காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்காத’ - படப்பிடிப்பில் வாய் விட்ட ரஜினி; வாயடைத்து போன சாந்தி!

44 Years of Oru Thalai Ragam: ஒரு தலை காதலின் வலி! காதல் தோல்வி கதைகளின் தொடக்க புள்ளி - டி.ஆருக்கு வாழ்க்கை தந்த படம்

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் இவர் படத்தில் வரக்கூடிய ஸ்டண்ட் காட்சிகளை டூப் வைக்காமல் இவரை நேரடியாக அவ்வப்போது நடிப்பார். தற்போது இவர் படே மியான் சோட் மியான் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ், நடிகை சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது ஸ்காட்லாந்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சியான அக்ஷய்குமார் மற்றும் டைகர் ஷெராப் உள்ளிட்ட ஒரு மோதும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான சண்டைக் காட்சியான இது படமாக்கப்பட்ட பொழுது டூப் வைத்து நடிக்குமாறு அக்ஷய் குமாருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் அக்ஷய் குமார் தேவையில்லை நானே நேரடியாக நடிக்கிறேன் எனப் பிடிவாதமாக மறுத்து அந்த காட்சியில் நடித்துள்ளார். இந்நிலையில் அந்த ஆபத்தான சண்டைக் காட்சிகள் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் அக்ஷய் குமாருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்ட சில நேரத்தில் முழங்காலில் இருந்து ரத்தம் கொட்டி உள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இது குறித்து அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், நடிகை அக்ஷய் குமார் சில நாட்கள் சண்டைக்காட்சிகளில் நடிக்காமல் விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அக்ஷய் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.