தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. மேடையிலேயே சரிந்து விழுந்த பிரபல பாடகி - நடந்தது என்ன?

தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. மேடையிலேயே சரிந்து விழுந்த பிரபல பாடகி - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil

Jun 01, 2023, 04:53 PM IST

Bhojpuri singer Injured: பீகாரில் பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bhojpuri singer Injured: பீகாரில் பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhojpuri singer Injured: பீகாரில் பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிக்கொண்டிருந்த பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய், துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Pudhiya Geethai: ரசிகர்களின் ஃபேவரைட்.. விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை!

Ajith Kumar : அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா... Good bad ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!

43 Years of Vidiyum Varai Kaathiru: ஆண்டி ஹீரோவாக பாக்ராஜ்! பின்னணி இசையில் மிரட்டிய இளையராஜா - தமிழில் சிறந்த த்ரில்லர்

Amala Paul: நன்றி சொல்ல உனக்கு.. கணவரின் அக்கறையால் நெகிழ்ந்து இருக்கும் அமலா பால்!

பீகாரைச் சேர்ந்தவர் நிஷா உபாத்யாய். பிரபல போஜ்புரி பாடகியான இவர் சரண் மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர். பாட்னாவில் வசிக்கும் நிஷா பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவரது நாட்டுப்புறப் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பாடகி நிஷா உபாத்யாய் வந்தார். அதிகாலை வரை நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீரேந்திசிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா பாடிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் பாடகி நிஷாவின் இடது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜனதா பஜார் காவல் நிலைய போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றனர். மேலும், பாடகி நிஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம், பீகார், தில்லி போன்ற வட மாநிலங்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் உற்சாக மிகுதியால் ஆபத்தை உணராமல் சிலர் மேற்கொள்ளும் விபரீதத்தால் அந்த விழாவே சோகத்தில் முடியும். அப்படி ஒரு சோகமான சம்பவம் பீகாரின் சரண் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.