தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Priyanka Gandhi: ’ என் தந்தையின் உடலை துண்டு துண்டாக எடுத்து வந்தேன்!’ குஜராத்தில் கலங்கிய பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: ’ என் தந்தையின் உடலை துண்டு துண்டாக எடுத்து வந்தேன்!’ குஜராத்தில் கலங்கிய பிரியங்கா காந்தி!

Kathiravan V HT Tamil

Apr 27, 2024, 08:37 PM IST

“உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்” (Priyanka Gandhi Vadra-X)
“உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்”

“உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்”

எனது தந்தை ராஜீவ் காந்தியின் உடலை துண்டு துண்டாக டெல்லிக்கு கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்து உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sam Pitroda: ‘தென் இந்தியர்கள் நிறம் குறித்த சர்ச்சை!’ காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!

DMK vs ADMK: ‘கூச்சமே இல்லையா! அரசியல் அமாவாசை பழனிசாமி அடிவயிறெரிய அறிக்கைவிடலாமா?’ திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

’தென்னிந்தியர்கள் கருப்பர்களா?’ காங்கிரஸ் கூட்டணியை முறிக்க திமுக தயாரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்

Jharkhand Congress: ஜார்க்கண்ட் காங்கிரஸின் எக்ஸ் கணக்கு தேர்தல் முடியும் வரை முடக்கம்

இந்தியாவில் இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு அடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை களம் சூடுபிடித்து உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, "எப்படிப்பட்ட பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இப்படி பணியாற்றினார்கள் என்று நான் கூறவில்லை. இந்திராஜி இருந்தார். நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர் பிரதமர் ராஜீவ் காந்தி உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன், அவர் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார் என வேதனை உடன் பேசினார். 

பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து, "எங்கள் பிரதமர் திமிர்பிடித்தவர், அவரிடம் ஒரு விஷயத்தை சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. உங்கள் நிலைமை அவருக்கு எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பினார். 

பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிய அவர், "அப்போது மன்மோகன் சிங் ஜி இருந்தார். அவர் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, அடல் பிஹாரி வாஜ்பாய் ஜியும் இருந்தார். ஆனால் மோடியை பற்றி நான் உறுதியாகச் சொல்கிறேன். உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமராக அவர் இருப்பார்.

"அவர்கள் என் குடும்பத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள், நாங்கள் கவலைப்படவில்லை; எங்களுக்கு இரும்பு நெஞ்சகள் உள்ளன, அவை 56 இன்ச் போலியானவை அல்ல," என்று பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக விமர்சித்த பிரியங்கா காந்தி, "பிரதமர் மோடி ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார், அவர் எதிர்க்கட்சிகளை தினமும் தாக்குகிறார், அவர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளார். இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர், எனது சகோதரர் (ராகுல் காந்தி) நாடாளுமன்றத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார். 150 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என பிரியங்கா காந்தி கூறினார். 

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட உள்ளது. 

சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பனியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, அவரது மூன்று முன்மொழிபவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பிரமாணப் பத்திரத்தில் அவர் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று கூறினர்.

மூன்றாவது கட்டமாக கட்ச், பனஸ்கந்தா, படான், மெஹ்சானா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கேடா, பஞ்சமஹால், தஹோத், வதோதரா, சோட்டா ஆகிய தொகுதிகள் அடங்கும். உதய்பூர், பருச், பர்தோலி, நவ்சாரி மற்றும் வல்சாத் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

அடுத்த செய்தி