Narendra Modi: ‘போதை விஷம் தமிழ்நாட்டில் பரவிட்டது! இனி சும்மா இருக்க முடியாது!’ நரேந்திர மோடி ஆவேசம்!
”தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க தொடங்கி உள்ளீர்கள். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தர வாக்கு உறுதி அளித்து உள்ளோம். தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னம் உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரப்பட உள்ளது”

திருநெல்வேலியில் பிரதமர் நரேந்திர மோடி
திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே! வணக்கம்! வணக்கம் திருநெல்வேலிக்கு! நெல்லையப்பர், காந்திமதி அம்மாவுக்கு வணக்கம்!
வரலாற்று பெருமைமிக்க நெல்லையில் மாற்றத்தின் குரல் எதிரொலிக்கிறது. உங்களின் உற்சாகம் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்து போய்விட்டது.
தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அந்த தமிழ்ப்புத்தாண்டிதான் பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடுகள், முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துளோம். மோடியின் கேரண்டி என பலரும் அதனை பாராட்டுகின்றனர்.