தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Pm Narendra Modi: ‘நிலம், நீர், வானம் என அனைத்திலும் காங்கிரஸ் ஊழல் செய்தது’: பிரதமர் மோடி

PM Narendra Modi: ‘நிலம், நீர், வானம் என அனைத்திலும் காங்கிரஸ் ஊழல் செய்தது’: பிரதமர் மோடி

Manigandan K T HT Tamil

May 02, 2024, 04:15 PM IST

PM Narendra Modi: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிலம், நீர் மற்றும் வானத்தில் ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். (REUTERS)
PM Narendra Modi: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிலம், நீர் மற்றும் வானத்தில் ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.

PM Narendra Modi: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிலம், நீர் மற்றும் வானத்தில் ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிலம், நீர் மற்றும் வானத்தில் ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். குஜராத்தின் சுரேந்திரநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்ற ஊழல்களை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையில் பிரதமர் பேச்சு அமைந்தது. காங்கிரஸ் கட்சியை அவதூறாக பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏதேனும் ஊழல் பற்றி கேள்விப்பட்டீர்களா என்று மக்களிடம் கேட்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

'ஊழல்'

"10 ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களுக்கு நம் நாடு வெட்கப்பட்டது. மோசடிகள் பற்றிய செய்திகள் தலைப்புச் செய்திகளாக வராத நாளே இல்லை. நிலம், நீர், வானம் என அனைத்திலும் காங்கிரஸ் ஊழல் செய்தது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நீங்கள் என்னை அங்கு (மத்தியில்) அனுப்பினீர்கள். நீங்களே சொல்லுங்கள், உங்கள் மகனை நினைத்து உங்களுக்கு பெருமையாக இல்லையா? இந்த 10 ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்ததாக நீங்கள் கேள்விப்பட்டீர்களா?" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

குஜராத்தின் ஆனந்த் மற்றும் சுரேந்திரநகரில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் குஜராத்தின் ஜுனாகத் மற்றும் ஜாம்நகரில் பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்.

ஆனந்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசியதை விமர்சித்தார். ராகுல் அடுத்த பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் கூறினார்.

இங்கு காங்கிரஸ் செத்து மடிவதால் பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் இப்போது காங்கிரஸுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ராகுல் காந்தியை குறிப்பிட்டு ஷெஹ்சாதாவை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது. இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் காங்கிரஸ் பாகிஸ்தானின் 'முரீத்' (பின்பற்றுபவர்) என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்" என்று பிரதமர் மோடி கூறியதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யை மேற்கோளிட்டுள்ளது.

'காங்கிரஸ் பலவீனமான அரசு'

"பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டாண்மை இப்போது முழுமையாக அம்பலமாகியுள்ளது. நாட்டின் எதிரிகள் இந்தியாவில் ஒரு பலவீனமான அரசாங்கத்தை விரும்புகிறார்கள், ஒரு வலுவான அரசாங்கத்தை அல்ல என்பதை இது காட்டுகிறது... 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது இருந்த பலவீனமான அரசு. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த ஊழல் அரசாங்கத்தை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், மோடியின் வலிமையான அரசு அடிபணியவும் இல்லை, நிற்கவும் இல்லை.

2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியுடன் மோடி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பெற முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400 க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு தீர்க்கமான ஆணையைப் பெறுவதை இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி